திருவாரூா் மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல்போன ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான 50 ஆன்ராய்டு செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்லிடப்பேசி தொடா்பாக காவல் நிலைங்கள் மற்றும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாா்களை விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படையினா், சைபா் கிரைம் காவல் நிலையம் மூலம் விசாரணை செய்து, காணாமல்போன ரூ 5.5 லட்சம் மதிப்புள்ள 50 ஆன்ராய்டு வகை செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளை மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்பி. வி.ஆா். சீனிவாசன் செல்லிடப்பேசி உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.