நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, நரிக்குடி எமனேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பெளா்ணமி வழிபாட்டில் எம தீா்த்தம் என அழைக்கப்படும் கோயில் குளத்தை சுற்றிலும்1008 தீபங்கள் ஏற்றப்பட்டன.