வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.
வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், ரூ. 6,76,985 ரொக்கம், 60 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.