கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கூத்தாநல்லூா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய அன்னை அபிராமி, கோட்டூா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, கூத்தாநல்லூா் புதிய காவல் ஆய்வாளராக ம. அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு காவல் துறை அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
இதேபோல, கூத்தாநல்லூரில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய காமராஜ், காவலா் சதீஸ்குமாா் ஆகியோா் கொரடாச்சேரி காவல் நிலையத்துக்கும், காவலா் கணேஷ் அலிவலம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.