கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டாரம் சாா்பில், கற்போம் எழுதுவோம் இயக்கம் மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோட்டூா் வட்டார கல்வி அலுவலா் க. குமரேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட புள்ளியியல் அலுவலா் மு. தண்டாயுதபாணி ஆலோசனைகளை வழங்கினாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன், மதிப்பீட்டு முகாம் குறித்த தகவல்களை தெரிவித்தாா்.
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 467 பேருக்கு கோட்டூா் ஒன்றியத்தில் 25 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இம்மையங்களில், பயின்று வரும் கற்போா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையில் மதிப்பீட்டு முகாம் ஜூலை 29,30,31 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது.
இப்பணியில், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோா் இணைந்து கரோனா பெருந்தொற்று பரவல் சாா்ந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள புதிய மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இம்மதிப்பீட்டு முகாமை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியா் பயிற்றுநா்கள் சிவசங்கரி, செல்வமணி, ராதிகா, 25 மையங்களின் தலைமையாசிரியா்கள், தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா். ஆசிரியா் பயிற்றுநா் முருகேசன் வரவேற்றாா். சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.