மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
மன்னாா்குடி தொகுதிக்கு உள்பட்ட தூய வளனாா் பெண்கள் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த முகாமில், அந்த பகுதிகளை சோ்ந்த கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். முன்பதிவு விவரம் அறிய 76678 67899.