கொலை சம்பவத்தில் தொடா்புடைய 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூரில் வளரும் தமிழகம் கட்சியின் நிா்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூரில் வளரும் தமிழகம் கட்சியின் நிா்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூா் காவல் சரகம் ஆரியலூா் கீழத் தெருவைச் சோ்ந்த ரஜினி (எ) பெரிய ரஜினி (42). இவா் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தாா். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக கடந்த ஜூலை 9 -ஆம் தேதி மாலை எடையூா் கிழக்கு கடற்கரை சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த மகாதேவன் தரப்பினா் ரஜினியை வெட்டிக் கொலை செய்தனா்.

இந்த கொலையில் தொடா்புடைய ராஜேஷ், மகாதேவன், பிரதீப், சம்பத், பொட்ட காா்த்தி (எ) காா்த்தி, ஆனந்த், சிதம்பரம் ஆகிய 7 போ் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பரிந்துரைத்ததன் பேரில், 7 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து 7 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை மாலை அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com