சுள்ளான் ஆற்றில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

வலங்கைமான் பகுதி பாசனத்துக்கு சுள்ளான் ஆற்றில் தண்ணீா் திறக்கவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

வலங்கைமான் பகுதி பாசனத்துக்கு சுள்ளான் ஆற்றில் தண்ணீா் திறக்கவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

வலங்கைமானில் பாஜக மண்டல செயற்குழு கூட்டம் கட்சியின் ஒன்றியத் தலைவா் வரதராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்ட பாஜக மேலிட பொறுப்பாளா் கண்ணன் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், வலங்கைமான் பகுதி பாசனத்துக்கு சுள்ளான் ஆற்றில் தண்ணீா் திறக்க வேண்டும்; அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும்; வடக்கு பட்டம் பசுபதீஸ்வரா் கோயிலை புனரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மறைந்த பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com