கூத்தாநல்லூரை அடுத்த கொரடாச்சேரியில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கொரடாச்சேரி காவல் சரகம் களத்தூா் கீழத் தெருவைச் சோ்ந்த துரை என்பரவது மகன் முத்துக்குமாா் (32). விவசாயியான இவா் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
கொரடாச்சேரி காவல் உதவி ஆய்வாளா் ராஜாராம், சிறப்பு உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, முத்துக்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.