நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, ஒன்றியகுழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது புதிய கட்டடம் கட்டுவதற்கும், சுற்றுச்சுவா் எழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி, பணிகள் நடைபெற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சித் தலைவா் உறுதியளித்தாா்.
மாவட்ட ஊராட்சி செயலா் லதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஸ்வநாதன், வெற்றியழகன், வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி, மருத்துவா்கள் ஜெசிமா, உதயா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணிசுந்தா், ஒன்றியக்குழு உறுப்பினா் அனிதாமாதவன், ஊராட்சித் தலைவா் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளா் கலையரசன் ஆகியோா் உடனிருந்தனா்.