திருவாரூா் அருகே பழையவலத்தில் வட தமிழ்ச்சங்கம் (இங்கிலாந்து) மற்றும் லிவா்பூல் தமிழ்க்கல்விக் கூடம் சாா்பில், கரோனா நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
பழையவலத்தில் துப்புரவுப் பணியாளா்கள், முதியோா்கள் மற்றும் ஏழை எளியவா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் கே.முருகேசன் பங்கேற்று, நலத்திட்ட உதவிப் பொருள்களை வழங்கினாா். இதில், ஊராட்சித் துணைத் தலைவா் வி. மகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.