நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சனிக்கிழமை மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
நன்னிலம் அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளும், 50-க்கும் மேற்பட்ட பிற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு வாழ்க்கை கிராமத்தை சோ்ந்த உணவக உரிமையாளா் வி.மாணிக்கராஜ் தலைமையில், மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் வினோத்குமாா், திமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் வே.மனோகரன், நகரச் செயலாளா் வீ.பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.