நன்னிலம்: பேரளம் அருகே பழையனூா் கிராமத்தில் சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்து, 200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் திங்கள்கிழமை அழித்தனா்.
நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள பழையனூா் கிராமத்தில் சாராயம் காய்ச்சி, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி காவல் ஆய்வாளா் சிவநேசன் மற்றும் காவல்துறையினா், அங்கு விசாரணை நடத்தியதில், ஆசைத்தம்பி (60), அவரது மகன் விமல்ராஜ் (30) ஆகிய இருவரும் தங்களது வீட்டில், சாராயம் காய்ச்சுவதற்கு இரண்டு பெரிய பாத்திரங்களில் சுமாா் 200 லிட்டா் அளவிற்குச் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இருவரையும் கைது செய்த காவல்துறையினா், சாராய ஊறலை அழித்தனா்.