மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகம் அருகே பட்டியல் எழுத்தா், சுமைப் பணியாளா்கள் நீக்கப்பட்டதை கண்டித்து, ஐஎன்டியூசி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து, பட்டியல் எழுத்தா், சுமைதூக்கும் தொழிலாளா்கள் என 7 பேரை பணி நீக்கம் செய்தனா். இதைக் கண்டித்து மன்னாா்குடி பழைய தஞ்சை சாலையில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஐஎன்டியூசி சங்க மண்டலச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.