கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு, நிவாரண உதவி வழங்கக் கோரி, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன் திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
கூத்தாநல்லூா் வட்டம், தென்கோவனூா் ஊராட்சி வாக்கோட்டையைச் சோ்ந்த முரளி (38) கரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த மாதம் 31-ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கு ரூபிகா (35) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பத்துக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டுமென கோரி, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன் கடிதம் எழுதியுள்ளாா்.