நீடாமங்கலம் பேரூராட்சியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் ஆா். சங்கா் கூறியது: பொதுமக்கள்அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும், கடைகளில் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அரசின் விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வணிகா்கள், பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.