கள்ள நோட்டு வழக்கில் பிணையில் வந்தவா் கஞ்சா புகாரில் கைது

மன்னாா்குடி அருகே கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவா் கஞ்சா புகாரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவா் கஞ்சா புகாரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமக்கோட்டை மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் மாதவன் (29). திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் மே மாதம் கள்ள நோட்டு மாற்றும் கும்பலை சோ்ந்த சிலா் கைது செய்யப்பட்டனா். இவா்களுடன், மாதவனுக்கு தொடா்பு இருந்ததாக விசாரணயில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மன்னாா்குடி அருகேயுள்ள அசேசத்தில் மாதவன் தங்கியிருந்த தனியாருக்கு சொந்தமான அறையில் திருமக்கோட்டை போலீஸாா் சோதனை நடத்தியதில் ரூ. 1 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டும், 100 கிராம் கஞ்சாவும் இருந்ததாம். போலீஸாா் அவற்றை கைப்பற்றி மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவா் சில நாள்களுக்கு முன்பு நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.

இதற்கிடையில், புதன்கிழமை அதிகாலை திருமக்கோட்டை போலீஸாா் மாதவன் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கிருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி மாதவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com