பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க பிரதமா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நன்னிலம் தாலுக்கா நுகா்வோா் அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவா் ஆா். பிரபு பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்கிறது. கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் கரோனாத் தொற்று பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்படும் பொதுமுடக்கத்தால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்படுகின்றன.
இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிக்கின்ற பொதுமக்கள் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். பொதுபோக்குவரத்து இல்லாமல் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவதால், எரிபொருளுக்குச் செய்யும் செலவு அதிகரித்து, பொதுமக்களைக் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிறது.
அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு தாங்கமுடியாத வகையில் அதிகரித்து வருகிறது. எனவே, நாள்தோறும் உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைக்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிா்ணயம் செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.