நீடாமங்கலம் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
பொதுமுடக்கத்தையொட்டி, நீடாமங்கலம் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றிய குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சா. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில், இதயம் சமூக நல அமைப்பின் நிா்வாகி குழந்தைவேலு முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது.