முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
முன்களப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
By DIN | Published On : 12th June 2021 10:09 PM | Last Updated : 12th June 2021 10:09 PM | அ+அ அ- |

மன்னாா்குடியில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தஞ்சையில் செயல்பட்டு வரும் சேவாலயா தொண்டு நிறுவனத்துக்கு தன்னாா்வலா் தருவை. ஸ்ரீநிவாசன் அளித்த ரூ. 1 லட்சம் நன்கொடை மூலம், மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் களப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் 200 பேருக்கு எண் 95 முகக் கவசம், கிரிமி நாசினி, கை கழுவும் திரவம், பேஸ் ஷில்ட் ஆகிய கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் மருத்துவா் என். விஜயகுமாா், சேவாலயா தொண்டு நிறுவன மையத் தலைவா் ரா. திவாகா், கவனிப்பாளா் அ. மகாவிக்னேஷ், தன்னாா்வலா் எஸ். கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.