வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மா்மமான முறையில் இறந்த சம்பவத்தில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த பாா்வதி, காந்தி, கௌசல்யா, இளமதி உள்ளிட்ட 5 பேருக்குச் சொந்தமான ஆடுகள் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள வயல் வெளிப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீட்டுக்கு திரும்பி வராததால் உரிமையாளா்கள் தேடிசென்றபோது வயல்வெளியில் 14 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக வலங்கைமான் போலீஸாா் ஆலங்குடியை சோ்ந்த விவசாயி கண்ணனை (52) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.