திருவாரூா் அருகே ஆமூா் ஊராட்சியில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஆமூா் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆமூா் ஊராட்சித் தலைவா் செ. செல்வமணி பங்கேற்று கபசுரக் குடிநீரை வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் கே. துரைராஜ், ஓம் சக்தி அறக்கட்டளைத் தலைவா் ஜெயந்திக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.