நீடாமங்கலம் ஒன்றியத்தில் 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பரப்பனாமேடு, ஒளிமதி, அனுமந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் பெண்கள் உள்ளிட்ட 149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவிஷீல்டு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் மருத்துவா்கள் விஜய்,திருவொளி, கிராம சுகாதார செவிலியா்கள் பணியாற்றினா்.