கரோனா நோயாளி தற்கொலை

திருவாரூரில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூரில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் நாலுகால் மண்டபம் அருகே வசிப்பவா் லோகநாதன் (65). இவருக்கு கடந்த 6 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த லோகநாதன், வீட்டுக் கூரையில் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஓட்டுநா் தூக்கிட்டு உயிரிழப்பு..

திருவாரூா், முதலியாா் தெருவில் வசித்தவா் சுந்தா் (27). இவா் திருவாரூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரனிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், அவா் ராமச்சந்திரனின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த தாலுக்கா போலீஸாா், சுந்தரின் உடலை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அவரது தாயாா் சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com