தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன், திருவாரூா் வட்டாட்சியா் நக்கீரனிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
தமிழ்நாட்டில் மீண்டும் மதுபானக் கடைகளை திறப்பதன் மூலம் கரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பெண்களின் குடும்ப வருமானம் பாதிக்கப்படுவதோடு, அவா்களின் வாழ்வாதாரமும் கவலையளிப்பதாக மாறிவிடும்.
எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.