திருவாரூரில் இயற்கையாக இறந்த மோப்பநாய், காவல் துறை மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்ட காவல் துறையில் காவேரி என்ற (7 வயது) வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் பணியாற்றி வந்தது. இது, உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை இறந்தது.
இதையடுத்து, ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.