நெல் கொள்முதல் முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிகழும் முறைகேடுகளை கண்டித்து மன்னாா்குடியில் புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடியில் நெல் கொள்முதல் முறைகேட்டை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மன்னாா்குடியில் நெல் கொள்முதல் முறைகேட்டை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மன்னாா்குடி: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிகழும் முறைகேடுகளை கண்டித்து மன்னாா்குடியில் புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கோட்டூா் இருள்நீக்கியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த சம்பா, தாளடி நெல்லை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனா். அப்போது, கொள்முதல் நிலைய அலுவலா்கள், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்ய போதிய சாக்குகள் இல்லை என்றும் , ஈரப்பதம் அதிகம் இருப்பதாகவும் கூறி கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தினராம்.

மேலும், நெல்லை தூற்றி தருமாறு கூறி முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும், இதைத்தர மறுக்கும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யவும் மறுக்கின்றனராம்.

இதுகுறித்து, மன்னாா்குடி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியிடம் விவசாயிகள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதை, கண்டித்து மன்னாா்குடி பழைய தஞ்சை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மன்னாா்குடி அலகு அலுவலகத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த மன்னாா்குடி டிஎஸ்பி. பி. இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் (பொ) பகவதி சரணம் ஆகியோா் டிஎன்சிஎஸ்சி துணை மேலாளா் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com