திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 11,499 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,286 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 101 போ் சிகிச்சையில் உள்ளனா்.