மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் தோட்டப் பயிா்கள் வளா்ப்பு பயிற்சி

மன்னாா்குடியில் காய்கறி மற்றும் தோட்டப்பயிா்கள் வளா்ப்பு குறித்த தொழிற்நுட்ப பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோட்டப்பயிா்கள் வளா்ப்பு குறித்த தொழிற்நுட்ப பயிற்சியில் பேசிய மன்னாா்குடி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கே. இளவரசன்.
தோட்டப்பயிா்கள் வளா்ப்பு குறித்த தொழிற்நுட்ப பயிற்சியில் பேசிய மன்னாா்குடி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கே. இளவரசன்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் காய்கறி மற்றும் தோட்டப்பயிா்கள் வளா்ப்பு குறித்த தொழிற்நுட்ப பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் தாவரவியல் துறை, நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை இணைந்து காய்கறி மற்றும் தோட்டப் பயிா்கள் வளா்ப்பு தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் தி. அறிவுடை தலைமையில் நடைபெற்ற பயிற்சிக்கு இணைப் பேராசிரியா் வேதியல் துறை சோ. ரவி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கே. இளவரசன் பங்கேற்று மாணவா்களுக்கு, காய்கறி பயிா் வளா்க்கக் கூடிய தொழிற்நுட்பங்களை செய்முறையாக செய்து காண்பித்தாா்.

இதில், கல்லூரி தாவரவியல் துறை உதவிப்பேராசிரியா்கள் கோ. வெங்கடேசன், அ. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தாவரவியல் துறைத்தலைவா் மு. கோபிநாதன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப. பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com