மன்னாா்குடியில் அறிவொளி வாசிப்பு இயக்கம் சாா்பில், சிறு நூலகம் மற்றும் வாசகா் வட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை 12-ஆவது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமை வகுத்து நூலகம் மற்றும் வாசகா் வட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் மாணவா்களின் கற்றல் திறன் பெருமளவு குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதுபோன்ற வாசிப்பு இயக்கம் மாணவா்களின் சிந்தனைக்கு விருந்தாக அமையும். மாணவா்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவு இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கம் சாா்பில், 500 புத்தகங்கள் நூலகத்துக்கு வழங்கப்பட்டன. விழாவில், அறிவியல் இயக்க மாவட்ட செயலா் யு.எஸ். பொன்முடி, ஒருங்கிணைப்பாளா் ரா. யேசுதாஸ், பாரதிதாசன் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனா் கே. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியா் எஸ். அன்பரசு வரவேற்றார. எழுத்தாளா் சரஸ்வதி தாயுமானவன் நன்றி கூறினாா்.