மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, முதியவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் திருக்களா் பகுதியைச் சோ்ந்தவா் உ. கோபாலகிருஷ்ணன் (65). இவரது மனைவி மாதவி(57). இவா்களின் 3 மகன்களுக்கும் திருமணம் ஆகிய நிலையில், தனித்தனியே வசித்து வருகின்றனா். இதற்கிடையில், கோபால கிருஷணனுக்கும் மாதவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். திங்கள்கிழமை, வழக்கம்போல் தம்பதியரிடம் பிரச்னை ஏற்பட்டத்தையடுத்து, வீட்டு அறையில் கோபாலகிருஷ்ணன்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, திருக்களா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.