மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூா் ஒன்றியத்தில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க.மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கோட்டூா் மேலப்பனையூரில் நடைபெற்ற பிரசாரத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தாா். திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன் முன்னிலை வகித்தாா். வேட்பாளா் க.மாரிமுத்து கூட்டணி கட்சியினருடன் திறந்த ஜீப்பில் நின்றவாறு மேலப்பனையூா், ரெங்கநாதபுரம், ஆதிச்சப்புரம், மழவராயநல்லூா், குன்னியூா், நெம்மேலி, கோட்டூா் தோட்டம், கோட்டூா், கருப்புக்கிளாா், வாட்டாா் ஆகிய 10 ஊராட்சிகளில் சென்று கதிா் அரிவாள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது முன்னாள் எம்எல்ஏக்கள் ஜி.பழனிசாமி, கே.உலகநாதன், திமுக ஒன்றியச் செயலா் பால.ஞானவேல், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சமுதாயம் செல்வராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வி.தெ.செல்வம், மதிமுக ஒன்றியச் செயலா் சிவ.கதிரவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் குமாரராஜா, திராவிடா்கழக மாவட்ட துணைச் செயலா் வீ.புட்பநாதன், சிபிஐ ஒன்றிய துணைச் செயலா் எம்.செந்தில்நாதன், கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.