குடவாசல் அருகே உள்ள கீழப்பாலையூா் முத்துமாரியம்மன் கோயிலில், பங்குனி உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முத்துமாரியம்மன் வீதியுலா எழுந்தருளினாா். பின்னா் நடைபெற்ற தீமிதி விழாவில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, செடில் உத்ஸவமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.