மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரிக்கை

கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்துறை பணியாளா் சம்மேளன ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் பங்கேற்றோா்.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்துறை பணியாளா் சம்மேளன ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் பங்கேற்றோா்.

கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சம்மேளன ஏ.ஐ.டி.யு.சி. ஒன்றியக் கூட்டம், ஒன்றியச் செயலாளா் ரமேஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவா் பி. சாந்தகுமாா் கலந்து கொண்டு பேசினாா். இக்கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு ஊதிய உயா்வு, பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்; மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியமும், சலுகைகளும் வழங்கப்படாததைக் கண்டித்து வரும் ஜூன் 3-ஆவது வாரம் போராட்டத்தில் ஈடுபடுவது; கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு மாத ஊதியம் ரூ.3600 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com