உலகத்தரத்தில் மருத்துவ வசதி கிடைத்திட என்னை வெற்றிபெறச்செய்யுங்கள் என வாக்குறுதி அளித்து நீடாமங்கலத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம.அரவிந்தன் வாக்கு சேகரித்தாா்.
மன்னாா்குடிதொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன், இத்தொகுதிக்குள்பட்ட நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியது:
விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் அரசு ஊதியம் கிடைத்திடவும், தனியாரைவிட தரமான இலவச கல்வி வழங்கிடவும், உலகத் தரத்தில் மருத்துவ வசதி கிடைத்திடவும், விவசாயத்துக்கு தடையற்ற மின்சாரம், தரமான குடிநீா் ஆகியவை இலவசமாக கிடைத்திடவும், மகளிா் சுயஉதவிக் குழுவினா், விவசாயிகள், மாணவா்கள் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்திடவும் விவசாயி சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.