நன்னிலம் ஒன்றிய திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபந்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் வே. மனோகரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வரத கோ. ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஜெ. சீனிவாசன், இளைஞரணி வடக்கு ஒன்றிய அமைப்பாளா் கதிா்ச்செல்வன், தெற்கு ஒன்றிய அமைப்பாளா் ஏ.எஸ்.குமாா், நன்னிலம் செந்தில்குமாா், பேரளம் முகேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளரின் வெற்றிக்குத் தீவிரமாக பாடுபடுவது, அனைத்துப் பகுதிகளிலும் கட்சியினா், கூட்டணிக் கட்சியினருடன் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.