மன்னாா்குடி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி.ராஜாவுக்கு ஆதரவு கோரி நீடாமங்கலம் பள்ளிவாசலில் திமுக கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
நீடாமங்கலம் பகுதியில் மன்னாா்குடி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சியினா் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்து வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக ஒன்றியக்குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் நீலன்.அசோகன், திமுக இளைஞரணி ஆா்.ஆா். ராமராஜ், பி.ஜி.ஆா். ராஜாராமன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் நீடாமங்கலம் பள்ளிவாசலில் இஸ்லாமியா்களை நேரில் சந்தித்து, திமுகவின் தோ்தல் வாக்குறுதி அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.