எஸ்டிபிஐ கட்சி தேசிய துணைத் தலைவா் பிரசாரம்

திருவாரூா் அருகே கொரடாச்சேரி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
எஸ்டிபிஐ கட்சி தேசிய துணைத் தலைவா் பிரசாரம்

திருவாரூா் அருகே கொரடாச்சேரி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இணைந்து போட்டியிடுகிறது. எஸ்டிபிஐ கட்சிக்கு திருவாரூா் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் எம்.ஏ. நஸிமா பானு போட்டியிடுகிறாா்.

அவரை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, கொரடாச்சேரி அருகே வெட்டாற்றுப்பாலத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் நகர, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Image Caption

கொரடாச்சேரியில் பிரசாரம் செய்யும் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com