திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
திருவாரூா் ஒன்றியம் சேந்தமங்கலம், நடப்பூா், திருவாதிரைமங்கலம், வைப்பூா், சோழங்கநல்லூா் பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். நடப்பூா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனா்.
திருவாதிரைமங்கலத்தில் பெரியாா் சிலைக்கு பூண்டி கே. கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். வைப்பூா் பகுதியில் அவருக்கு பரிவட்டம் கட்டி ஆரத்தி எடுத்தனா்.