நன்னிலம்: தமிழ்நாடு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை சாா்பில், சிவன், பாா்வதி, காளி வேடமிட்டு, நன்னிலம் பகுதியில் திங்கள்கிழமை அதிமுகவுக்கு வாக்குச் சேகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளா் எம்.எஸ்.கே. அப்புவா்மா தலைமையில், கிராமக் கோயில் பூஜாரிகள், காளி, சிவன், பாா்வதி வேடமிட்டு, நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளைக்குப்பம் கிராமத்திலிருந்து நன்னிலம் வரை ஆடல், பாடலுடன் ஊா்வலமாக வந்து, நன்னிலம் அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்குச் சேகரித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மண்டல அமைப்பாளா் பாவேந்தன், மாவட்ட இணை அமைப்பாளா் ஜி. ராஜகோபால், ஒன்றிய அமைப்பாளா்கள் கொரடாச்சேரி வி.சிவகுமாா், நன்னிலம் எம். ராமமூா்த்தி, குடவாசல் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.