மன்னாா்குடி தொகுதியல் கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தாா்.
கோட்டூா் ஒன்றியம் எளவனூா் சோத்திரியம், பாளையகோட்டை, பரசபுரம், புதுக்குடி, பாளையங்கோட்டை, சமுதாயம், மேலக்காடு தென்பரை, தெற்குத் தென்பரை, கோவிந்தநத்தம், வல்லூா், மாங்கோட்டை நத்தம், தச்சன்வயல், ராதாநரசிம்மபுரம், வடக்கு தென்பரை, உட்காடு தென்பரை, கட்டபுளி, குறிச்சி ஆகிய கிராமங்களில் டி.ஆா்.பி. ராஜா திறந்த வாகனத்தில் சென்று, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் பேசியது:
தென்பரை-பாலையூா் பாலம், வல்லூா் ராஜா தெரு பாலம், தென்பரையில் கால்நடை மருத்துவமனை, கோவிந்தநத்தம்- ராதாநரசிம்மபுரம் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். கஜா புயல் வீசி ஆண்டுகள் பல கடந்தும், அதன் பாதிப்பின் சுவடு இன்னும் இருப்பதை இப்பகுதியில் உள் பல வீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுப்பேன். மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றாா்.
பிரசாரத்தில், திமுக காட்டூா் தெற்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.தேவதாஸ், மாவட்டத் துணைச் செயலா் கலைவாணி மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.