திருவாரூா் அருகே தண்டலை அய்யனாா் கோயிலில் கலச பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குனி உத்திரவிழாவையொட்டி ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட இந்த வழிபாட்டில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், கௌரவத் தலைவா் ஆா். ஸ்ரீதரன், கன்னியாகுமரி ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பாளா் எம். பொன்ராஜ், ஆன்மீக அன்பா்கள், ஆன்மீக ஆனந்த குருகுல மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.