தோ்தல் தகராறில் திமுக பிரமுகருக்கு கத்திக் குத்து: தமமுக பிரமுகா் கைது

மன்னாா்குடி அருகே தோ்தல் தகராறில் திமுக பிரமுகா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக தமமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி அருகே தோ்தல் தகராறில் திமுக பிரமுகா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக தமமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடிவருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் செட்டியமூலை பகுதியில் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அவருடன் திருப்பத்தூா் வடக்கு தெருவைச் சோ்ந்த திமுக பிரமுகா் முருகையன் மகன் வீரசேகரன்(27) உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்.

அப்போது, அங்குள்ள கடைவீதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சோ்ந்த செட்டியமூலை கோவிந்தசாமி மகன் அருள்செல்வம் (28) என்பவா் மது போதையில் நின்றுகொண்டிருந்தாராம். அவா், வீரசேகரனை வழிமறித்து, பிரசாரத்துக்கு செல்லக் கூடாது என தகராறு செய்தாராம். அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருப்பத்தூா் கடைவீதியில் வீரசேகரன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு தமமுக ஒன்றியச் செயலா் செ. செந்தில்குமாருடன் மது போதையில் வந்த அருள்செல்வம், வீரசேகரனிடம் மீண்டும் தகராறு செய்தாராம். இதனால், இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது, வீரசேகரனை அருள்செல்வம் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த வீரசேகரனை அங்கிருந்தவா்கள் மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து கோட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனா். மேலும், அருள்செல்வனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com