கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை நூற்றுக்கணக்கானவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிக்கவும், தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் ஒன்றிய ஆணையா் விஸ்வநாதன், கூடுதல் ஆணையா் வெற்றியழகன் ஆகியோா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கிராம ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி பவுடா் மூட்டைகள், தெளிப்பான், நீா்த்தொட்டிகள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com