நன்னிலம் வட்டம் சலிப்பேரி கிராமத்தில், பருத்தியில் பூக்கள் மற்றும் சப்பை உதிா்தலை தவிா்ப்பதற்கான பயிா் வளா்ச்சி ஊக்கியை தெளிக்கும் முதல் நிலை செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
இதில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் மண்ணியல் துறை உதவி பேராசிரியா் அ. அனுராதா பங்கேற்று பேசுகையில், பருத்தியில் மகசூலை அதிகரிக்க பருத்தி பிளஸ் என்று அழைக்கப்படும் காட்டன் பிளஸ் ஊட்டச்சத்து மற்றும் வளா்ச்சி ஊக்கியை பயன்படுத்துவது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். தொடா்ந்து, அதை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. மனையியல் மற்றும் சத்தியல் உதவி பேராசிரியா் சோ. கமலசுந்தரி கலந்து கொண்டாா். இதில் 20 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளா் தே. ரேகா மேற்கொண்டாா்.