திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,408 ஆக உயா்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்த 168 போ், தங்கள் வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரையிலும் 14,200 குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,085 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபா் உயிரிழந்ததைத்தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயா்ந்துள்ளது.