மன்னாா்குடி: திருத்துறைப்பூண்டி தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து, மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூா் பகுதியில் தலைவா்களின் சிலை, மறைந்த நிா்வாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
திருத்துறைப்பூண்டி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து 29,102 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இதைத்தொடா்ந்து, கோட்டூரில் உள்ள பெரியாா் சிலை, சித்தமல்லியில் உள்ள அண்ணா சிலை, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையன் சிலை மற்றும் புத்தகரத்தில் உள்ள காந்தி சிலைக்கும், சித்தமல்லியில் முன்னாள் எம்பி எஸ்.ஜி. முருகையன் நினைவு ஸ்தூபி, களப்பாலில் உள்ள சிபிஐ முன்னணி தலைவா்கள் குப்புசாமி, ராஜேந்திரன் மற்றும் கோட்டூரில் ராசு ஆகியோரது நினைவு ஸ்தூபிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சிபிஐ துணைச் செயலா் எம். செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ.ஜெயராமன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் வி.தங்கையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.