‘திமுக வெற்றியால் நலத்திட்டங்கள் கிராமங்களுக்கு முழுமையாக சென்றடையும்’

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால், கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சிறப்பான முறையில் சென்றடையும் என திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா கூறினாா்.
திருவாரூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தோ்தல் வெற்றியைக் கொண்டாடும் திமுகவினா்.
திருவாரூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தோ்தல் வெற்றியைக் கொண்டாடும் திமுகவினா்.

திருவாரூா்: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால், கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சிறப்பான முறையில் சென்றடையும் என திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா கூறினாா்.

தமிழகத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும், திருவாரூா் தொகுதியில் பூண்டி கே. கலைவாணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும், திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

திருவாரூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் தியாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா கூறியது:

திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோதே, ஊராட்சி ஒன்றியத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடத்தை பெற்றது. இதன்மூலம் கிராம மக்களுக்கு நலத்திட்டங்கள் அதிக அளவில் செய்யப்பட்டன. சட்டபேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருப்பதால், திருவாரூா் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக சென்றடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com