திருவாரூா்: திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு தீ விபத்து விழிப்புணா்வு மற்றும் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து இந்த முகாமில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அலுவலா் ச. வடிவேல் தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் பா. முருகேசன் முன்னிலை வகித்தாா். இதில், நிலைய அலுவலா்கள் வி.வெங்கடேசன் (திருவாரூா்), வி. செல்வராஜ் (குடவாசல்), போக்குவரத்து அலுவலா் க. பக்கிரிசாமி ஆகியோா் பங்கேற்று பயிற்சி அளித்தனா்.