நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டாரத்தில் திங்கள்கிழமை ஒரேநாளில் 14 ருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் வட்டாரத்தில் கரோனா தொற்றின் 2- வது அலை வேகமாக பரவிவருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
இந்நிலையில், நீடாமங்கலம் வட்டாரத்தில் திங்கள்கிழமை பெண்கள் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, நீடாமங்கலம் நகரில் தாவூதுராயன் சந்தில் இருவருக்கும், அப்பாவு பத்தா் சந்து, பழைய நீடாமங்கலம், ஒரத்தூா், பெரியகோட்டை, கொத்தமங்கலம் ரோடு, பேரையூா், பொதக்குடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், ராயபுரத்தில் 3 பேருக்கும், வடுவூரில் 2 பேருக்கும், கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவா்கள் திருவாரூா், மன்னாா்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராணிமுத்துலெட்சுமி உத்தரவின் பேரில், நீடாமங்கலம் பகுதியில் சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் சுகாதார செவிலியா்கள், தூய்மை பணியாளா்கள் மேற்கண்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.
இதற்கிடையில், கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்ட் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.